Sunday 10 October 2010

நகைச்சுவை பயங்கரம்...!!

சி‌‌ல்லறை ...

அய்யா தர்மம் பண்ணுங்க அய்யா! இல்லப்பா... சில்லறை இல்லையே... ஏன் சாமி எப்பவும் இப்படி சில்லறையாவே யோசிக்கிறீங்க!...
முதல் நாளே ...

என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி? அப்படியா அப்ப படம் ஹிட்! மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!...
காத‌ல் - க‌ல்யாண‌ம்
இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

என்ன சொல்றீங்க?


உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?

ப‌ி‌ச்சை‌க்கார‌ன்..

கைகாலெல்லாம் நல்லாத்தான இருக்கு! ஏன் இப்படி வீடு வீடா அலஞ்சு பிச்சை எடுக்கற?

ரொம்ப நன்றி சாமி! எனக்கு புத்தி புகட்டினீங்க! இனிமே அலையாம ஒரே இடத்துல உட்கார்ந்து பிச்சை எடுக்கறேன் சாமி
வேலைக்காரி
இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு அப்டி என்னதான் செஞ்சா?
திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா....

நாய் இரவல்கணவன் : என்னது? பக்கத்து வீட்டு கமலா நம்ம வீட்டு நாயை இரவல் கேக்கறாளா? என்ன விஷயமாம்?
மனைவி : போன வருஷம் இதே நாள்லதான் நம்ம நாய் உங்க அம்மாவை கடிச்சிது, அவங்க அதுக்கப்புறம் நம்ம வீட்டு பக்கம் தலை வச்சுக் கூட படுக்கவே இல்லையாம் . . . அதான்!...

ஆட்டுக்கால் :
வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?
வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க....

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails