Sunday 28 February 2010

குறட்டை விடுவதால் கிடைக்கும் பலன்

எச்சரிக்கை :
இந்த பலன் கணவன்மார்களுக்கு மட்டுமே பொருந்தும்....!


அப்பாவி மனைவிகள் எச்சரிகையாக
இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்..........!


சிலசமயங்களில் இந்த எச்சரிக்கை
சில அப்பாவி கணவன்மார்களுக்கு பொருந்தும்.........!




.
.
.
.
.


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

Thursday 25 February 2010

பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி




1) ஒரு ஆண் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய என்ன செய்ய வேண்டும்?
respect her.. care for her.. protect her..love her..
அதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் செய்ய???? ஒரே ஒரு ஸ்மைல் போதும்.
விடு மச்சி. நமக்கு குழந்தை மனசுடா

2) எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ செல்லம். உன்னை நான் பத்திரமா வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்

3) அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள்,  சிற்பமாக்கி காட்டுகிறேன் –
விவேகானந்தர்
சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா

4) பெண்களை ப்ரபோஸ் செய்ய புது வழி :
பையன்: அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கிங்க.
பொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன?
பையன்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.

5) பொறம்போக்கு….
;;
;;
;;
;;
லேண்ட் ஃபார் சேல். தொடர்புக்கு – 9789887654(அல்லது உங்க நம்பர்)

6) டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது
டீச்சர்:  தேசிய பூ?
மாணவன்: ஒரு சின்னத் தாமரை
டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா
மாணவன்: கரிகாலன் காலைப் போல
டீச்சர் : (அடிக்கிறார்)
மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட
டீச்சர் : குட்டுக்கிறார்
மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது
டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
மாணவன் :??????????????????????????????

7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
நண்பன் 2: விடறா. ஃபீல் பண்ணாத
நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது
நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எஸ்.எம்.எஸ் கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி




பின் குறிப்பு : இடப்பற்றாக்குறையால் (???) நிறைய பாகங்களை விட வேண்டியதாகிவிட்டது. எனதருமை ரசிகப் பெருமக்கள் (4 பாலோரை
வச்சிக்கிட்டு ரசிகப்பெரு மக்களாம்) மன்னித்தருவாள்வராக,..

நான் ரசித்தது அப்படியே உங்களுக்கு,..

ஊதா மேற்கத்திய நாகரிகம், சிவப்பு நம் நாகரிகம்,..


Friday 19 February 2010

Mr.மொக்கை

mrs.மொக்கை : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?
Mr.மொக்கை : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!

MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..

Wednesday 17 February 2010

இந்தியாவும் கடவுளும்!

லகத்தைப் படைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கடவுள். படைப்புத் தொழிலின் சூட்சுமங்களை தன்னுடனிருந்த மற்ற தேவதைகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் அவர்.
"எல்லா படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும், ஆக்கமும் அழிவும் சேர்ந்தே படைக்கப்பட வேண்டும் என்றார் அவர். உதாரணமாக, 10 மான்களைப் படைத்தால் 1 சிங்கத்தைப் படைக்க வேண்டும். 100 சாதுக்களைப் படைத்தால் அவற்றுக்கு ஒரு வைரியைப் படைக்க வேண்டும்.

Tuesday 16 February 2010

அயன்!!!

தூங்கி எழுந்து வந்த ரமேஷ் துண்டுடன் நிற்கும் விவேக்கை பார்த்து, "ஏண்டா காலங்காத்தால இப்படி மும்தாஜ் மாதிரி நிக்குற?" என்றான்.
"நம்ம ரூம் சாஜகான் என்னை இப்படி நிக்க வெச்சுட்டான்"
"ரூம் சாஜகான்? யாரு நம்ம பிரகாஷா?"
"என்ன நம்ம பிரகாஷ்? நீ அவன் கூட்டாளியா? ஊருக்குள்ள இப்படி சொன்ன நீ செத்த!!"
"ஏன் டா?

கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான‌ பதில்கள்கள்!

கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத 10 கேள்விகளும் நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான‌ பதில்களும், உங்களுக்காக‌...
1. சினிமா தியேட்டரில் நண்பரையோ, உறவினரையோ பார்க்கும் போது‌....

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!

தைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.
டிஸ்கி - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை

IPL காமெடி கலாட்டா!










கிராமத்து கிரிக்கெட் நினைவுகள்..!

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கும் இந்த நேரத்தில், எங்கள் கிராமத்தில் நாங்கள் ஆடிய டெஸ்ட் மேட்ச் பற்றி எழுதிகிறேன்.
தஞ்சாவூருக்கு அருகில் நீடாமங்கலம். எங்களுடன் விளையாடிய சுவாரஸ்யமான ஒரு நபர் தான், இந்த அனுபவக் கட்டுரையின் நாயகன்.


டிவென்டி 20 உலகக் கோப்பை: காமெடி கலாட்டா!







டெரர்.. சிரிப்ஸ்..!

"எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா, திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்"
"என்ன சொல்ற நீ"
"நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுகிட்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்.. உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்."

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

Sunday 14 February 2010

காதல் கடிதமும் மொக்கை பதிலும் Feb 14 spl

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தனது வகுப்புத் தோழிக்கு கேள்வி பதில் வடிவத்தில் காதல் கடிதம் எழுதுகின்றான்.

 என்னுடைய அன்பான காதலிக்கு, 
இந்த கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால்

பிரிவு அ க்கு பத்து மார்க்கும்
பிரிவு ஆ க்கு 5 மதிப்பெண்களும்
பிரிவு இ க்கு 3 மதிப்பெண்களும் கிடைக்கும்.

1) நீ வகுப்பறையில் நுழையும்பொழுது உன் பார்வைகள் என்னில் வந்து விழுகின்றது ஏனென்றால் ,

அ ) நீ என்னைக் காதலிக்கின்றாய்
ஆ) என்னைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லை
இ) உண்மையில்...நான் உன்னை பார்க்க வைக்கிறேனா..?

2) ஆசிரியர் ஜோக் சொல்லும் பொழுது நீ சிரித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்க்கிறாய் ஏனென்றால் ,

அ) நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க நீ விரும்புகிறாய்
ஆ) எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்று நீ சோதனையிடுகிறாய்
இ) என்னுடைய சிரிப்பு உனக்கு கவர்ந்திருக்கிறது

3) நீ வகுப்பறையில் பாடிக்கொண்டிருக்கும் சமயம் நான் உள்ளே நுழைந்தால் நீ பாடுவதை நிறுத்திவிடுவாய் ஏனென்றால் ,

அ) எனக்கு முன்னால் பாட நீ வெட்கப்படுகிறாய்.
ஆ) என்னுடைய வருகை நீ பாடுவதை தடுக்கின்றது
இ) நீ பாடுவது எனக்கு பிடிக்கவில்லையோ எனப் பயப்படுகிறாய்

4) உன்னுடைய சின்ன வயசுப் புகைப்படத்தை என்னிடமிருந்து நீ மறைக்கிறாய் ஏனென்றால்,

அ) நீ வெட்கப்ப்படுகிறாய்
ஆ) நான் ரசிக்கமாட்டேனோ என்று நினைக்கிறாய்
இ) எதற்கென்றே தெரியவில்லை



5. வருகின்ற பேருந்தையெல்லாம் விட்டுவிட்டு நீ நேற்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாய் ஏனென்றால் ,

அ) நீ எனக்காக காத்திருந்தாய்
ஆ) என்னைப் பற்றிய கனவில் இருந்ததால் நீ என்னைக் கவனிக்கவில்லை
இ) எல்லாப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது

6. ஒரு மேடான பகுதியில் நீ ஏற முற்பட்டபொழுது நானும் அதே நேரத்தில் எனது நண்பனும் கைகளை நீட்டுகிறோம். நீ எனது நண்பனின் கைகளை பிடிக்கின்றாய் ஏனென்றால்,

அ) நான் ஏமாறுவதைக் கண்டு ரசிக்கின்றாய்
ஆ) வெட்கத்தில் நீ என் கையைப் பிடிக்கவில்லை
இ) பதில் சொல்லத் தெரியவில்லை..

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிகக்கு வந்தபோது நீ என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினாய் ஏனென்றால் ,

அ) நான் உன்னுடைய கணவனாகப் போவதால்
ஆ) உன்னுடைய பெற்றோர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக
இ) சாதாரண அறிமுகம்தான் எந்த வித காரணமுமில்லை

8. ரோஜாப்பூக்கள் தலையில் சூடி வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும் என்றேன். மறுநாள் நீ தலையில் ரோஜாப்பூக்களோடு வருகிறாய். ஏனென்றால் ,

அ) என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக
ஆ) உனக்கு ரோஜாப்பூக்கள் பிடிக்கும்
இ) தற்செயலாக உனக்கு ரோஜாப்பூக்கள் கிடைத்தது.

9. என்னுடைய பிறந்த நாளில் நான் செல்லுகின்ற ஆலயத்திற்கு நீயும் வருகிறாய்..ஏனென்றால் ,

அ) எப்பொழுதும் போல தற்செயலாக நீ அந்த ஆலயம் வருகிறாய்..
ஆ) யாரும் வாழ்த்துவதற்கு முன் நீ என்னை வாழ்த்தவேண்டும் என்பதற்காக
இ) உனக்கு இறைபக்தி அதிகம் இருப்பதால் தினமும் ஆலயம் வருகிறாய்.

நீ நாற்பது மதிப்பெண்களுக்கும் மேலாக மதிப்பெண் பெற்றிருந்தால் நீ என்னை விரும்புகிறாய். தயங்காமல் உன் காதலைச் சொல்லிவிடு

நீ முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உன் மனதில் காதல் மொட்டு விடத் தொடங்கியிருக்கியது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும்.

நீ முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால். என்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்று நீ உனக்குள்ளேயே குழப்பத்தில் இருக்கின்றாய்
உன்னுடைய பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.
 

------------------------------------------------------------------------------------
அதற்கு காதலியானவள் அதே கேள்வி பதில் வடிவத்தில் பதில் அளிக்கின்றாள்..

நண்பனே,

கீழ்கண்ட ஆம் அல்லது இல்லை என்ற எனது கேள்விகளுக்கு விடையளி..

1. முதல் பெஞ்சில் யாராவது இருக்கிறார்கள் என்றால் வகுப்பில் நுழையும் மாணவர்களை கவனிப்பது தற்செயலானதுதான்.

ஆம்
இல்லை

2. ஒரு பெண் யாருடைய நகைச்சுவைக்கோ சிரித்து - ரையாவது திரும்பி பார்த்தால் அதற்குப் பெயர் காதலா..?

ஆம்
இல்லை

3. பாடிக்கொண்டிருக்கும் போது பாடல் வரிகள் மறந்து விட்டால் அப்படியே நிறுத்தில விடுவது இயல்புதானே?

ஆம்
இல்லை

4. என்னுடை குழந்தை வயசு புகைப்படத்தை என் பெண் தோழிகளிடம் காட்டும்போது ஆண்மகனான நீ நாகரீகம் கருதி ஒதுங்கிச் செல்ல வேண்டும்..

ஆம்
இல்லை

5. பேருந்து நிலையத்தில் நான் எனது உயிரத் தோழிக்காக காத்திருக்க கூடாதா என்ன..

ஆம்
இல்லை

6. உனது கைகளை பிடிக்காமல் உனது நண்பனின் கையைப் பிடிக்கும்பொழுதே உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையாடா..?

ஆம்
இல்லை


7. நீ என்னுடைய நண்பன் என்று எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாதா..?

ஆம்
இல்லை

8. நான் லோட்டஸ் - காலிப்ளவர் - பனானா போல இருப்பதாக கூட நீ கூறியிருக்கின்றாய்தானே?

ஆம்
இல்லை

9. ஓ உனக்கு அன்றுதான் பிறந்த நாளா..? அது எனக்குத் தெரியாது. நான் தினமும் அந்த ஆலயத்திற்கு வருவேன் தெரியுமா..?

ஆம்
இல்லை

இந்த கேள்விகளுக்கெல்லாம் நீ ஆம் என்று பதிலளித்தால் நான் உன்னை காதலிக்கவில்லை என்று அர்த்தம்

நீ இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதலைப் பற்றியான உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்று அர்த்தம்.


(அக மொத்தம் அவனுக்கு ஆப்பு தான் :D)

Saturday 13 February 2010

உங்களை பாத்தா சி(ரி)ப்பு சி(ரி)ப்பா வருது -இது லொள்ளு ஏரியா......

ஏலே இது லொள்ளு உலகம் .....எவனாவது வந்து லொள்ளு பண்ணிகிடே இருப்பான்..வம்பு இழுத்துகிடீ இருப்பான்...... இத தடுக்க முடியாது.... ஏனா அவன்ட சுபாவம் அப்பிடி....!!!!

Thursday 11 February 2010

நாணயம் திரை விமர்சனமும் மூலதன படம் The Bank Job உம்

நாணயம்


ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தாகி இருக்கிறது. பழைய கணவனால் பிரச்சனை வந்து அடிதடி ஆகிறது. மறுநாள் அவன் பிரசன்னா காரில் பிணமாய்.

Wednesday 10 February 2010

விஜய்யிற்கு வச்ச ஆப்பு 1




1)
பாரக் ஒபாமா பின்லீடானை பிடிச்சே ஆகணும் எண்டு தன் இராணுவத்தமுடக்கி விட்டாரு சூர்ய எங்க ஒளிஞ்சுக்கலாம் எண்டு தன் உதவியாளர் கிட்டகேட்டாரு "வேட்டைக்காரன் போகுது அந்த தியேட்டர் இல போய் ஒளிஞ்சுக்குங்கஒரு பயலும் வர மாட்டான் அங்க " எண்டு சொன்னான். ஒசாமா உடனேஅடப்போயா தப்பிக்க வழி கேட்டா சாகுறதுக்கு வழி சொல்லுறியே "எண்டு கடுப்பாகினான் . "

02) ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ்
என்டிச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல எண்ட பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு அதனால நான் தான் பேமஸ் என்டிச்சு. அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான் எண்டு சொல்லிச்சு..

03) ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான் எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்டு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

04) நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை
எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சுசொன்னாராம் "இது அவுட் ஒப் சிலபஸ் "
இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப்
படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

05) விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா எண்டு
ஆச்சரிய பட்டு கேட்டான் ஒருத்தன் ..
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்டும் இல்லடா இந்த படத்துக்கு
ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

06) விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும்
முடியல்ல தூங்கவும் முடியல்ல

07) ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் :
விஜய் அரசியலுக்கு வந்த பின் உலகம் என்ன ஆகும் எண்டத அப்பட்டமா காட்டி இருக்காங்க !!!


08)
எஸ் எம் எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த
எஸ் எம் எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வில்லு படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

09) குயிலபுடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம் "விஜய" புடிச்சி காச
கொடுத்து நடிக்க சொல்ற உலகம் அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி
ஓடும் ஐயா?

10) வழமையாக ஒரு நடிகனின் படத்தை அவனது வெறிப்படத்துடன்தான்
ஒப்பிடுவார்கள்,விஜயின் முன்னைய படங்களையும் அவ்வாறே கில்லியுடன் ஒப்பிட்டார்கள்.ஆனால் இன்று வேட்டைக்காரன் எப்படி என்று ஒருவரிடம் கேட்டால் 'கில்லி' அளவுக்கு இல்லை என்றுகூட யாரும் கூறுவதில்லை , மாறாக குருவியை விட பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது...

11)உலகத்தில் இரண்டு விதமானவர்கள் உண்டு ..."வாழ வேண்டியவர்கள், சாக
வேண்டியவர்கள்".. ம்ம்.. அப்போ விஜய் ...? "ஆங்... மறக்க பட வேண்டியவன்" ம்ம்... அப்போ அவங்க அப்பன்.? "ஆங்... யாருப்பா அவரு?

12)"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்

இலவசம் எல்லாம் இலவசம்



வர வர நாட்டுல எதுக்கு எதுக்கு இலவசம் குடுக்கறதன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சுங்க.

  • இப்படித்தான் மூணு வருஷம் முன்னாடி:

# ஒரு சட்டை வாங்கின ஒரு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க .


  • இரண்டு வருஷம் முன்னாடி


# இரண்டு சாரி வாங்கின அஞ்சு சாரி இலவசம்ன்னு சொன்னாங்க.


  • போன வருஷம்

# ஒரு செல்போன் வாங்கின இரண்டு செல்போன் இலவசம்ன்னு சொன்னாங்க.


  • இப்போ என்னன்னாங்க

# ஒரு கணினி வாங்கினால் இன்னொரு கணினி இலவசம்ன்னு சொல்றாங்க.....



  • இலவசங்களை நம்பி நாம் கடைக்கு போனால் அவன் 1008 கண்டிஷன் போடுவான். அப்புறம் நாமும் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவோம் . எது எப்படியோ மேல உள்ள இலவசங்கள் நம் சிலருக்கு தான் உதவும் .
( நான் சொன்னத நம்பி கடையில கேக்காதீங்க பின்னிடுவாங்க ரய்ம்ஸ்க்கு எழுதினேன் )

**********************************************

  • இந்த மாதிரி இலவசம் கிடைச்ச எப்படி இருக்கும் யோசிச்சு பாப்போமா?


  • வில்லு, ஏகன், கந்தசாமி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு இலவசமாக ஊக்க தொகை அளிக்கலாம்.(எனக்கும் கிடைக்கும்).


  • ஒரு லிட்டர் பெட்ரோல் போட்ட இன்னொரு லிட்டர் பெட்ரோல் இலவசம்ன்னு குடுத்த நல்ல இருக்கும். (ப்ரீயா காருக்கு பெட்ரோல் அடிக்கலாம்)


  • விஜய் படத்தை ஓட வைப்பதற்கு ஒரு டிக்கெட் எடுத்தால் பத்து டிக்கெட் இலவசம் என்று கொடுக்கலாம். ( பதினொரு பேரா போய் அழுவாங்க)


  • அஜித் படத்துக்கு டிக்கெட் தரும் போது கூட இலவசமா ஒரு தலைவலி தைலம் தரலாம். (ஏகன் போன அன்று பயங்கர தலைவலி )


  • ஒரு சவரன் தங்க நகை வாங்கின இன்னொரு சவரன் நகை இலவசம்ன்னு குடுக்கலாம். (புருசங்காரன் நிம்மதியா இருப்பான்)


  • டி.ஆர் படத்துக்கு போகும்போது இலவமாக ஒரு குரங்கு பொம்மை கொடுக்கலாம்.(சின்னவங்களுக்கு use ஆகும்)

வேற என்ன சொல்லலாம் யோசிச்சு கமெண்ட் பண்ணுங்க

முன்னெச்சரிக்கை எப்பயும் வேணும்


இந்த மாதிரி முன்னெச்சரிக்கை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க......


  • சில பேர் வீட்டை விட்டு வெளிய போகும் போது கதவை பூட்டி விட்டு, சிறிது தூரம் சென்ற உடன் திரும்பி வந்து கதவை ஒழுங்கா பூட்டியாச்சா என்று கதவு உடையும் அளவுக்கு தொங்கி (இழுத்து) பார்ப்பார்கள். இது ஒரு போபியா தான். ஆனா நல்ல விஷயம் தான் ஒரு தடைவைக்கு பத்து தடவ கூட செக் பண்றது தப்பு இல்லை.

  • சில பேர் பைக் சைடு லாக் பண்ணிட்டு அத ஒரு மூணு நாலு தடவ ஒடிச்சு பாப்பாங்க,அவங்க ஓடிக்கிற ஓடியிலியே லாக் ஸ்க்ரு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு லூஸ் ஆகிடும். அப்புறம் அதுவே பைக் திருடுபவனுக்கு பாதி வேலையை நாமே குறைத்த மாதிரி தான்



  • சில பேர் ஹோட்டல் உள்ளே செல்லும் போது, சாப்பிடும் போது அடிக்கடி பர்சையோ இல்ல பாக்கெட்யோ தொட்டு பார்த்து கொண்டே சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு விதமான முன்
எச்சரிக்கை தான். ஒரு வேலை காசை வீட்லயே வச்சிட்டு வந்து நல்ல சாப்பிட்டு ஹோட்டல்ல டேபிள் கிளீன் பண்ணாம தப்பிச்சிக்கலாம்.
  • மேலே கூறியவை சாதரணமாக நாம் பின்பற்றுபவை, கிழே வாங்க
நான் உங்களுக்கு சில ஐடியா தரேன்.
******************
  • முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி.....உங்களுக்கு சில ஐடியாக்கள்

  • நீங்க கிழே உள்ள படத்தை பாருங்க நம்ம ஆளு காரை எப்படி
பாதுகாப்பா பூட்டு போட்டு வச்சிரிக்காரு.....




சரி இதெல்லாம் விடுங்க ஜுஜுபி மேட்டர்.... ஆனா கிழே உள்ள படத்தை பாருங்க...
  • (பி.கு:கொஞ்சம் ஓவர்ஆ இல்ல....அந்த ஐம்பத்து ரூபாய் செருப்புக்கு ஐந்நூறு ரூபாய் பூட்டு.இந்த செருப்பை இப்படி பூட்டி வச்சவரு உண்மையலே பயங்கர முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆளா இருப்பார் போல.)


(எவனோ கல்யாண வீட்ல செருப்பை பறிகொடுத்தவன்
போட்டோ எடுத்து போட்டுருகான்னு நினைக்கிறேன்.)

டாக்டர் டாக்டர் டாக்டர்



“டாக்டர், எங்க தொட்டாலும் சரியா வலிக்குது”
  • எங்க தொட்டாலுமா?”
“ஆமாம் டாக்டர்”
  • எங்கே, இடது காலைத் தொடுங்க
“வலிக்குது டாக்டர்”
  • வலது கால்
“வலிக்குது டாக்டர்”
  • கொளப்புதேகழுத்தைத் தொடுங்க
“வலிக்குது டாக்டர்”
  • மர்மமா இருக்கேமாரைத் தொடுங்க
“வலிக்குது டாக்டர்”
  • “ ஒண்ணுமே புரியலைதலையைத் தொடுங்க
“வலிக்குது டாக்டர்”
  • ம்ம்ம்ம்இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்
“சரி டாக்டர்”
  • இரண்டு நாளாயிற்று.
“என்ன டாக்டர், ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சதா?”
ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே அப்செட்"

விஜய் ஜோக்ஸ்


போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

  • கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி குருவி போகலாமா ?

  • கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...



ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

  • மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...


விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

  • இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....





வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

  • வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

  • வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?


அருணாசலம் ரீமிக்ஸ் ;

  • ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?


ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

  • விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?
பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?


ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?
(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)

(இந்த படம் கூறுவது என்னன்னா "நாங்க ஓசில பினாயில் குடுத்த கூட குடிப்போம்")


இப்போ இருக்குற டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைத்து நான் வசிச்ச பதிவு ஒன்றை போஸ்ட் செய்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

  • "வருஷம் முழுவதும் விடாம உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் நம்ம கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இருபது ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இருபது ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....
அதனால இந்த ஐடியா

ஐடியா நெ.1:
----------------

  • உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
  • அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

  • மச்சான் உன் ஆளு இன்னிக்கு upo படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.(ஏ. சி. ல)

"மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************


  • சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.

ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------
பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:
---------------------
சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.
(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

விஜய்யுடன் இணையுங்கள்



விஜய் உடன் அவருடைய மக்கள் இயக்கதில் சேர விரும்பும் அவரது ரசிகர்களுக்கு வைத்த எக்ஸாம் பேபர் லீக் ஆயிடிச்சு நம்ம நண்பர் XXXXX (5 எழுத்து பெயர் face book ல பிரபல்யம் அனா அவரும் fail ஆகிட்டாரு) அவருக்கு கிடச்ச கோப்பி இங்க நான் புப்ளிஷ் பன்னுறேங்கோ

  • டாக்டருக்குப் பிறகு விஜய்க்கு மிக விரைவில் கிடைக்கப்போகும் அடுத்த பட்டம் என்ன?

  1. ஆஸ்கர் நாயகன்
  2. பாஃப்டா நாயகன்
  3. கோல்டன் க்ளோப் நாயகன்
  4. மேற்கூறிய அனைத்தும்

  • கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - சும்மா காட்டியே - மக்களை கொல்ல முடியும்?

  1. அம்பு
  2. வில்லு
  3. கல்லு
  4. கொம்பு

  • வசீகரா படத்தில் விஜய் மிகவும் விரும்பி போட்ட வேடம் எது?

  1. சூப்பர்மேன்
  2. ஸ்பைடர்மேன்
  3. ஐயன மேன் (iron man)
  4. பெட் மேன்

  • விஜய் இன்னும் எந்த ஆட்டக்காரராய் படங்களில் நடிக்கவில்லை?

  1. பூட்பால்
  2. ஹாக்கி
  3. பைக் ரேஸ்
  4. மேற்கூறிய அனைத்தும்
  • குளிக்கும்போது சோப்பு எங்கு போடுவீர்கள்?

  1. உங்கள் சொந்த முதுகில்
  2. மற்றவர்கள் முதுகில்
  3. சோப்பு போடும் பழக்கமில்லை
  4. குளிக்கும் பழக்கமேயில்லை.
  • அடுத்த படத்தில் விஜய், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
  1. ஸ்போர்ட்கார்
  2. புகைவண்டி
  3. கப்பல்
  4. ஜெட்

  • விஜய் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

  1. இரண்டு சக்கரங்களும் ஒரு கைப்பிடி (ஹேண்டில் பார்) மட்டும்
  2. இரண்டு சக்கரங்கள் மட்டும்
  3. ஒரு கைப்பிடி மட்டும்
  4. எதுவுமே தேவையில்லை. அவரேபுர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

  • பல படங்களில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து விஜய் போட்ட சண்டைக் காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இன்னும் எந்தெந்த விசையை எதிர்த்து அவர் நடிக்கலாமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

  1. மின் புல விசை
  2. காந்த புல விசை
  3. நியூட்டனின் விசை
  4. 1,2 ஆகியவை

  • விஜய்இன் அடுத்த பட க்ளைமாக்ஸ் வசனத்தில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பின்வருவனவற்றில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து 100க்கு குறைவான வார்த்தைகளில் வசனத்தை எழுதுக.

  1. காதல்ன்றது பபுள்கம் மாதிரிங்க...
  2. காதல்ன்றது மூக்குசளி மாதிரிங்க...
  3. காதல்ன்றது தேர்தல் மாதிரிங்க...
  4. காதல்ன்றது கத்திரிக்கா மாதிரிங்க...



அனைத்திற்கும் சரியாக பதில் கூறியவர்கள ஜோஇன் ஆனங்கோ. ஒன்றுக்கு மேற்பட்ட தவறான பதில் சொல்பவர்களுக்கு விஜய் இன் பட டிவிடிக்கள் தபாலில்
அனுப்பி வைக்கப்பட்டது (அவங்க கெதி என்னவோ ? ) .

சிரிக்க கொஞ்சம் பழைய ஜோக்


  • வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
  • அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
  • "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
  • "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
  • "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."



****************************************************************



  • நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
  • என்ன சொல்றீங்க
  • இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

****************************************************************


  • எங்க வீடு கோயில் மாதிரி....
  • அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?

****************************************************************

  • நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?
  • ஆசாமி : கமல் !
  • தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?
  • ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!
  • தேர்வாளர் : ???!!!


****************************************************************


  • என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
  • பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?


****************************************************************

  • நான் நீச்சல் கத்துக்கேறன்
  • எங்கே...?
  • தண்ணியிலதான்...!


****************************************************************


  • உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
  • ஓட்டுவீடு, அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

மச்சான் வாடா கடை தெருவில் நின்று கடலை போடலாம்



மச்சான் வாடா , கடை தெருவில் நின்று கடலை போடலாம் , டி கடை மறைவில் நின்று தம் போடலாம் , அப்பாவின் சட்டை பையில் பணத்தை களவாடலாம், நல்ல தான் இருக்கும் ... அதே வேலையே நாளை உன் பையன் செய்யும் பொது உனக்கு புரியும் . அப்பாவின் மரணத்திற்கு யார் காரணம் என்று .

காதல் என்பது பனமரம் போல : ஏறினா நொங்கு , விழுந்த சங்கு .

காதல் கல்யாணம் சரி , அதுக்காக இப்படியா பண்ணுறது ?
ஏன் , என்ன பண்ணங்க ? கல்யானத்த செலவில்லாம பீச்ல நடத்தி , சாப்பாடிக்கு பதிலாக சுண்டல் கொடுத்து அனுப்பி வச்சுட்டாங்க .

வார்த்தை தடுமாற காரணம்:கண்கள்! வாழ்கை தடுமாற காரணம்:பெண்கள்!

ஆசைகள் இல்லாத வாழ்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது "துன்பம் " இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்

சாரி கொஞ்ச நாலா என்னால சரியாய் SMS அனுப்ப முடியல . Because advancesa Feb 14'ku வந்த லவ் லேட்டேர்ரை எல்லாம் இப்ப தான் படிச்சி முடிச்சேன். கொஞ்சம் tired அதான். .

Coco-Cola பாட்டில்லை திராகக ஏன் டெண்டுல்கர்ரை கூப்பிட்டாங்க? ஏன அவர் ஒரு ஒபெனர் .

சர்தார்ஜி ஜோக் பகுதி 4


 நம்ம சர்தார் கோழிப்பண்ணை வச்சார்.. முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு.. ஆச்சரியப்பட்ட கோழிக்குஞ்சு சப்ளை பண்றவர் கேட்டார்...

"என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு..?"
"எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது.."
" என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா..?"
" அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்..மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.. !"
" என்னது..? மண்ணா..?"
" ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது.. அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது...!!!!!!" 
கடைக்காரன் தலை சுத்தி விழுந்தான்
என்ன சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை 

கண்டக்டர் சர்தாருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு தொல்லை இருந்தது.. வைத்தியரைப் போயி பாக்க.. அவரும் கொஞ்ச மாத்திரைகளைக் கொடுத்து திங்க சொன்னார்.. இருந்தாலும் பலன் இல்லே..
"என்னாய்யா வைத்தியரு நீ..? ஒண்ணும் குணமாக மாட்டேங்குதே..?"
" மூதேவி.. ஸ்டாப்பிங்குல விசில் ஊதும் போது மெதுவா ஊதித் தொலை.. உசிரக் குடுத்து ஊதிப்புட்டு இங்க வந்து என் உசுர வாங்காதே..!" 


சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"
கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?
சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?
க.காரர்: இல்லையே.
சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?
கடைக்காரர்: ஏன்னா, இது துணிக்கடை..!



ஒரு தடவை 3 சர்தார்ஜிங்க ஆற்றுக்கு அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டாங்க.. என்ன
செய்யறதுன்னு தெரியலே.. கடவுளை வேண்டுனாங்க.. கடவுளுக்கு வேறே முக்கியமான ஜோலி
இருந்ததாலே ஒரு கந்தர்வனை அனுப்பினாரு.. அவன் 3 சிங்கு முன்னால தோன்றி ஆளுக்கு
ஒரு வரம் கேளுங்க ன்னான்..
முதல் சிங்கு, ஆத்துக்கு அந்தப் பக்கம் என்னோட அறிவை பயன்படுத்திப் போகணும்..
அதுக்கு வழி சொல்லு" ன்னு கேட்க..
அதுக்கு கந்தர்வன்.. "ஆகற வழியப்பாரு.. வேறே ஏதாவது உருப்படியா கேளு" ன்னான்..

சிங்கு," அப்படின்னா என்னை தெலுங்கு காரனா ஆக்கிடு" ன்னாரு. உடனே கை ரெண்டும்
வலுவா மாறிடுச்சு.. சொய்ங் ன்னு தண்ணியில குதிச்சு நீச்சல் அடிச்சுப்
போயிட்டான்..
ரெண்டாவது ஆள், " என்னை மலையாளத்தானா மாத்திடு" ன்னு சொல்ல உடனே உடம்பு வலுவா
ஆயிடுச்சு.. பக்கத்தில இருந்த மரத்த ஒடைச்சு தெப்பம் செஞ்சு அதுல ஏறிப்
போயிட்டாரு..
மூணாவது சிங்கு," என்னை தமிழனா ஆக்கிடு... ன்னாரு. உடனே புத்தி வலுவா
மாறிடுச்சு.. பக்கத்துல இருந்த பாலத்து வழியா அக்கரைக்குப் போயிட்டாரு..!


அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பி கஞ்சா சிங்கும் ஒரு
குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன்
குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்.. 

அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்டி விட. இன்னொரு குதிரை காதையும்
வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.
அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு.. 

" கவலைப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!


சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத
ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி
நிறுத்தப் பட்டார்..
காவலர் ; என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..?
சர்தார் ; தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி
வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?


நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ). ஒரு வீட்டுக்காரர்
அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..
"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே(சுவர்ல) சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன
கேக்கறே..?"
"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "
ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய்
கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..
"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க "
செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் "
நின்னுக்கிட்டுருந்துச்சு..!


உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் சர்தார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்..
"டாக்டர்.. எனக்கு உடனே ஃப்ரெஞ்ச் மொழி கத்து தர ஏற்பாடு பண்ணுங்க.."
"ஏன்..?"
" சொர்க்கத்திலே ஃபிரெஞ்ச் தான் பேசுவாங்களாம்.."
" சொர்க்கத்துக்கு தான் போகப் போறீங்கன்னு எப்படி உறுதியா சொல்றீங்க..?"
" நரகத்துக்குப் போனா ஒண்ணும் பிரச்னை இருக்காது.. எனக்குதான் பஞ்சாபி நல்லா
தெரியுமே..!



சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.

 
சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.

சர்தார்ஜி ஜோக் பகுதி 3



ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தர், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் . 
பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் , 
அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது ,அந்த இருக்கைதான்


(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.


ஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்..



பானர் சிங் ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். அவருக்கு டாய்லெட் போக வேண்டி இருந்தது. அங்கு கதவைத் திறந்தவுடன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விட்டு கதவைச் சாத்தி விட்டு வந்து விட்டார்.

இப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.

அந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார். உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றாரே பார்க்களாம்.

 
ஒரு முறை பானர் சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.
பக்கத்தில் நின்ற ஜக்கு சிங் "ஏன்.... என்ன நடந்தது ? " என்று கேட்டார்.
பானர் சிங்கும் நான் டெல்லிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.
 
"ஏன் அப்படி ? " என்று ஜக்கு சிங் கேட்டார்.
 
Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.

நம்ம பானர் சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து
டெல்லிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்லியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.
வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.

ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார். ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது " என்ன செய்வது 
முன்னால் போகும்
போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே" என்றாரே பார்க்கலாம்.

ஜக்கு சிங் அழுது கொண்டிருந்தார்.பானர் சிங் என்னவென்று கேட்டார்.

''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.
பானர் சிங் கேட்டார். "இப்போ என்ன நடந்தது."

"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....
ஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.
அதற்கு கடைக்காரர் பானர்சிங்கிடம் சர்தாருக்கு எல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பானர்சிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.
அதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.
சர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். 
கடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்
 
 
 சர்தாஜி ஒருவர் ரெயின் ஓட்டுனராக இருந்தார், அப்போ ஒரு முறை 200,250 பிரயாணிகளுடன் ரெயின் போய்கொண்டு இருக்கிறது அப்பொது திடிரெண்டு ரெயின் தண்டவாளத்தை விட்டு ஒரு தோட்டத்துக்குள் சென்று திரும்ப தண்டவாளத்துக்கு வந்த பொழுது அதில் இருந்த எல்லோரும் திடிரெண்டு ரெயினை நிறுத்தி அந்த சர்தாஜியை பார்த்து கேட்டாங்களாம் என்ன நடந்தது ஏன் தண்டவாளத்தை விட்டு விலகி தோட்டத்துக்கள்ள சென்றது எண்டு அதற்கு சர்தாஜி சொன்னாரம் ஒருத்தன் தண்டவாளத்தின் மேல நடந்து சென்று கொண்டு இருந்தான் அதுதான் எண்டாராம், 
அதற்கு பிராயணிகள் கேட்டார்களாம் இந்த ரெயினுக்க 200 பேருக்கு மேல இருக்கிறம் இவர்களை விட அந்த ஒருத்தனின் உயிர் முக்கியமா போச்சா உமக்கு எண்டு.. அதுக்கு உடன சர்தாஜி சொன்னாராம் 
எனக்கு அது தெரியும் பட் தண்டவாளத்தில போனவன் திடிரெண்டு ரெயினை கண்டுட்டு பக்கத்த இருந்த தோட்டத்துக்குள்ள ஓடிட்டான் எண்டாராம்

ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!
 

ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..
" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?" 

" மூளைக் காய்ச்சல்லே...!"

மன்னர்களின் ஜோக்கள் சில


ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததின் விளைவு இந்த நகைச்சுவையின் தொகுப்பு



ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்
: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்
: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை
ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன்.
உடனே
, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன்.
300
ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.


மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.
மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.
அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....



அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....
மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....

மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்...
மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?
மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.

மன்னன்: மந்திரியரே... தளபதி எங்கே ?..
மந்திரி: பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....

மன்னர்: யாரங்கே?
சிப்பாய்: பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
வீரன்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
வீரன்: அதைத்தான் சொல்லீட்டான்...!


அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?
மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....


ராசா நீங்க நம்ம ராணிட்ட எப்பவும் ஜாக்கரைதையா இருங்க
ஏன்
அவங்க கத்தியால பழத்தை அறுத்துக் கொண்டே இப்படி பாடுனாங்க.
என்ன பாடுனாங்க
'உன்னைத்தான் நானறிவேன்...மன்னவனை யார் அறிவார்'' னு பாடுறாங்க. மன்னா..பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வரான்.
எந்த பக்கத்துல இரு ந்து வரான்...
கிழக்கு பக்கத்துல இருந்து...மன்னா...
அப்ப வா ... மேற்க்கு பக்கமா ஓடிடலாம்....

மன்னா!!! எதிரிநாட்டு மன்னன் நரகத்திற்குத்தான் செல்வான் என்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது.
எப்படி??
அவன் தன் படையோடு நம் நாட்டுக்குள் புகுந்துவிட்டான்.

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?
மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?
அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....



ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!


ச்சே.. போருக்குக் கிளம்ப திலகம் இடும்போதாவது
அரசி 'போகாதே.. போகாதே என் கணவா..'னு பாடுவாள்னு எதிர்பார்த்தேன்.
கள்ளி... கடைசிவரை வாயை திறக்கவே இல்லியே!


''புரிந்துகொள்ளுங்கள் மன்னா!
போருக்கு குதிரையில் போவதுதான் வசதி.
உங்கள் இஷ்டப்படி சொகுசாக பல்லக்கில் புறப்பட்டால்
போய்ச் சேரவே மூன்று மாத காலமாகும்.
படைவீரர்கள் பொறுத்துக்கொண்டாலும்
குதிரைகளும் யானைகளும் கோபப்படாதா?''


''கத்தியைப் போல கதாயுதத்தை இடுப்பில் சொருகினால் பளு தாங்காது
என்று சொன்னால் கேட்கிறீர்களா அரசே!''

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails