Monday 6 December 2010

SMS-ல் கடுப்பேத்தறாங்க

நாட்டாமை: என்னம்மா பிராது?
பெண்: அய்யா, எம் புருஷன் என்ன கொடும பண்றாரு, நீங்க தான் எங்கள பிரிச்சு வைக்கணும்.
நாட்டாமை: பிரிஞ்சு போற அளவு என்ன கொடும பண்ணுனா ?
பெண்: அய்யா, டெய்லியும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருங்க...
நாட்ஸ்: ஆ... செல்லாது,செல்லாது, வேற சொல்லு...
பெண்: கீவலன் படத்துக்கும், வருத்தகிரி படத்துக்கும் மொத காட்சிக்கு கூட்டிட்டு போறேனு  சொல்லாருங்க....
நாட்ஸ்: ஆ.. அவ்வளவு கொடுமக்காரனா..,
அப்படினா சரி.. உங்களுக்கு விவாகரத்து கொடுத்துரேன்...

***************************************************************************************


என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்ச டாக்டரா இருந்தாலும்,
கம்பியூட்டர் வைரஸ் -க்கு மாத்திர குடுக்க முடியாது.
இப்படிக்கு, கம்பியூட்டர் மவுஸ் -க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்.
*******************************************************************************************
அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...


மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?
*******************************************************************************************
தவறுகள் என்பது வெற்றியின் முதல் படி என்றுச் சொல்கிறார்கள். உண்மையில் தவறுகளைத் திருத்திக்கொள்வதே வெற்றியின் முதல் படி .
*******************************************************************************************

பரீட்ச்சையில் பெயில் ஆனா திரும்பவும் படிச்சு பாஸ் ஆகலாம், ஆனால் பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு, பெயில் ஆக முடியுமா?

*************************************************************************************,  சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின் விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத் தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.
****************************************************************************************
வடிவேலு: இங்க ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்...

பார்த்திபன்: அப்ப ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை குடுங்க.
*********************************************************************************

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?

படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.
***************************************************************************

அழகான ஓவியம் என்று ரசிக்கும் உலகத்தார்க்கு எப்படி புரிய வைப்பேன், அது என் புகைப்படம் என்று...
**********************************************************************
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் , நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டுத்தான் வந்திருப்பார்கள்..
********************************************************************************

இன்றைய பழமொழிகள்:

1. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு குண்டா குழம்பு.

2.தம்பி உடையார்;
அண்ணன் செட்டியார்..


3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...


4.சுத்தம் சோறுப்போடும், சுகாதாரம் குழம்பு ஊற்றும்.

************************************************************
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது,
எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
****************************************************************************
டேய், ஏன் சட்டையில நூறு ரூபா வச்சிருந்தேன், இப்ப பத்து ரூபா தான் இருக்கு, ஏன்டா பணத்த எடுத்த?
நீ தான நூத்துக்கு, தொன்னூறு எடுக்கணும்னு சொன்ன!
******************************************************************************************

யாருடைய இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள், ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம் தான். (எலும்பு 206 இருக்கு எசமான்)

*********************************************************************************************

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால் உன் பெருமை யாருக்கும் தெரியாமல் போய்விடும்...
****************************************************************************************
சிரிப்பு வந்தால் சிரிக்க முடியும், அழுகை வந்தால் அழுக முடியும்; ஆனால் காய்ச்சல் வந்தால் காய்ச்ச முடியுமா?

***********************************************************************************
முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails