Monday 26 April 2010

தேனீக்களைக் காணவில்லையாம் !.

இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .



தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .


தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .



தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.



தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .


இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails