
சர்தார்ஜீ ஒரு தடவை வேலைக்கு விண்ணப்பம் நிரப்பினார். அங்கு ஒரு பகுதியில் சம்பள எதிர்பார்ப்பு என்று இருந்தது. நீண்ட நேர யோசனையின் பின்பு சர்தார்ஜீ ஆம் என்று நிரப்பினார்
சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் “இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தையை பெறுகின்றாள்.
சர்தார்ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்
சர்தார்ஜீ: ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க ?
மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு
சர்தார்ஜீ: முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடுகினம்?
ஆசிரியர் : “நான் ஒருவனைக் கொலை செய்தேன்”. இதன் எதிர் காலம் என்ன?
சர்தார்ஜீ : “நீங்கள் சிறைக்குப் போவீர்கள்”
பேராசிரியர் சர்தார்ஜீ ஒரு தடவை பிளம்பரை (plumber) பல்கலைக் கழகத்திற்கு வரச்சொன்னாராம். ஏன் என்றால் எப்படி பரீட்சை வினாத் தாள்கள் வெளியே கசிகின்றன என அறியத்தான்.
சர்தார்ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!
தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே? சர்தார்ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…
சர்தார்ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது. முகவர் வரி முதலியவற்றை கழித்து விட்டு மீதம் 15 கோடியைக் கொடுத்தார். கோபம் அடைந்த சர்தார்ஜீ சொன்னார் “ என்னுடைய 20 கோடியைத்தா! இல்லா விட்டால் என் 20 ரூபா டிக்கட் காசைத்தா!”
சர்தார்ஜீ ஒரு தடவை அருங்காட்சியகத்திற்குச் சென்றார். சர்தார்ஜீ விளக்க உரைஞருக்கு : என்னப்பா இது புதுச் சித்திரம் என்ற பெயரில இப்படி பயங்கரமான உருவமெல்லாம் வரைவீங்களா?”
விளக்க உரைஞர் : மன்னிக்கோணும் நீங்க பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு கண்ணாடி
சர்தார்ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?
சர்தார்ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்
சர்தார்ஜீ மிக மெதுவாக ஒரு கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார் நண்பர் : ஏன்யா இவ்வளது ஸ்லோவா கடிதம் எழுதறா?
சர்தார்ஜீ : என் மகன் இப்பத்தான் எழுதப் பழகிறான் அவன் மெதுவாகத்தான் வாசிப்பான் அதுதான்……
சர்தார்ஜீ தன் மகனுக்கு : உன் வயசில வாஷிங்டன் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்தார் தெரியுமா? நீயும் இருக்கிறியே! தண்டச் சோறு???
மகன் : உங்க வயசில அவர் அமேரிக்க ஜனாதிபதி ஆகிட்டார். நீங்களும் இருக்கிறீங்களே??? பொறுப்பில்லாத அப்பன்!.

அடுத்தது கொஞ்சம் ஹர்ட் ட்ரை
துப்பறியும்
நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.
நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.
அவரிடம்
ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த
படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை
அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.
ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த
படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை
அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.
சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில்
எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண்
இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த
சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார்
அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்
துரத்திவிட்டார்.
மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான்
சார்!'' என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!
1 comment:
கடைசி C.I.D ஜோக் பட்டயக் கிளப்புது..... we need more தீயா வேல செய்யனும்.......more தீயா வேல செய்யனும்.......
Post a Comment